நஜீப்
நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல்
கடந்த வாரம் முறுத்தெட்டுவே தேரர் கூட்டிய பேரணி படுதோல்வியில் முடிந்ததை அனைவரும் அறிந்ததே. இந்தப் பேரணியில் போய் ஐமச. தலைவர் சஜித் கலந்து கொண்டு மூக்குடைபட்டதும் எல்லோரும் பார்த்த செய்திதான்.
இது இப்போது அவர் கட்சியிலும் கூட்டணியிலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது. கூட்டணியில் இருக்கின்ற தனித்துவ முஸ்லிம் தலைவர் ஒருவர் சஜித் செயலை தனது சகபாடிகளிடத்தில் கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார்.
இந்தப் பைத்தியக்காரனுக்கு அரசியல் தெரியாது. இனவாதத்துக்கு நாட்டில் இடமில்லை என்று ஒட்டுமொத்த சமூகங்களும் தீர்மானித்திருக்கின்ற நேரத்தில் சஜித் அங்கு போனதால் இந்த பைத்தியக்காரன் என்ற வார்த்தையை தனித்துவத் தலைவர் உச்சரித்ததாகத் தெரிகின்றது.
கடந்த தேர்தலில் முஸ்லிம்களில் பெரும்பான்மை வாக்குகள் அனுராவுக்குப் போய் விட்டது. சஜித்தின் இந்தச் செயலால் எஞ்சி இருக்கின்ற கொஞ்சம் வாக்குகளும் நமக்கு இல்லாமல் போகும் என்பது தனித்துவத் தலைவர் ஆதங்கமாக இருக்கின்றது.





