ஜாமியுல் அஸ்ஹர் மாணவ தலைவர்களுக்குப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு-2023

இன்று கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி மாணவ தலைவர்களுக்குப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நடப்பு வருடத்துக்கான மாணவ தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் அசாட்கான் அவர்களின் தலைமையில் கல்லூரி அஸ்ரஃப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவர் ஸ்லின் மொஹம்மட் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

மாணவ தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் பெற்றோரினால் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

கனிஸ்ட,சிரேஸ்ட பிரிவு மாணவர்கள் நடப்பு வருடத்துக்காக இவ்வாறு பதக்கங்களை இன்று பெற்றுக் கொண்டனர்.

Previous Story

றோ கோட்டை விட்டது எப்படி?

Next Story

படுதோல்வியில் முடிந்த சர்வ கட்சி கூத்து!