தம்மியும் ரணிலும் மூன்றாம் இடத்துக்குப் போட்டி!
சில்லறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை!
கடைசியாக 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தொகை இந்த முறை ஒரு 50 என்ற அளவுக்குப் போகலாம். அல்லது தேர்தலைக் குழப்பியடிக்கின்ற நோக்கில் அந்த எண்ணிக்கை திட்டமிட்டு நூற்றுக் கணக்கில் என்ற அளவுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அந்தளவுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தலைக் குழப்ப சதி வேலைகளும் சிந்திக்கப்பட்டு வருவதால் நாம் இப்படி ஒரு தகவலை சொல்லி வைக்கின்றோம்.
ஆனால் எத்தனை ஆயிரம் வேட்பாளர்கள் அரங்குக்கு வந்தாலும் 2024 ஜனாதிபத் தேர்தல் களத்தில் மோதல் அணுரவுக்கும் சஜித்துக்கும்தான். மூன்றாம் இடத்துக்கு தம்மிகவும் ரணிலும் போட்டி.
அடுத்து எந்த ஜம்பவான் வந்தாலும் அவர்களில் எவரும் ஒரு இலட்சம் வாக்குகளைத் தொடுவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும் என்று நாம் அடித்துக் கூறுகின்றோம்.
2024
ஜனாதிபதித்
தேர்தல்
களநிலவரம்
வாக்காளர்
17140354
வாக்களிப்பு
81 % வரை
அணுர 38 %
சஜித் 35 %
மொட்டு 17 %
ரணில் 06%
இதர 04 %
நன்றி கார்டியன் நியூஸ் (8) 07.08.2024