ஜனாதிபதி ரணிலுக்கு ஆப்பு!

-நஜீப்-

வருகின்ற 2023 மார்ச் 26 முன்னர் ஜனாதிபதி ரணிலின் அதிகாரமிக்க பதவிக்கு மொட்டுக் கட்சியினர் ஆப்பு வைக்க இருக்கின்றார்கள் என்று  உறுதியான தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.

அதன்படி முதலில் தினேஷை பிரதமர் பதவியல் இருந்து தூக்கி அந்த இடத்துக்கு மஹிந்தவைப் பிரதமராக நியமிப்பது. அதன் பின்னர் ரணில் மீது எதாவது நொண்டிக் காரணத்தை வைத்து நம்பிக்கை இல்லாப் பிரேரனை ஒன்றைக் கொண்டு வந்து மஹிந்தாவை மீண்டும் அதிகாரம் மிக்க ஜனாதிபதி கதிரையில் அமர வைத்து மீண்டும் தினேஷை பிரதமராக நியமிப்பதுதான் அந்தத் திட்டம்.

இதற்கு என்ன காரணம் என்று தேடிப் பார்த்தால் 2023 மார்ச் 26 ம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கின்ற அதிகாரம் ஜனாதிபதியின் கரங்களுக்குப் போகின்றது.

இந்த நிலையில் ரணிலை அதிகாரம் மிக்க பதவியில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என்று மொட்டுக் கட்சியிலுள்ள பலர் மஹிந்தவுக்கு தெளிவு படுத்தி இருக்கின்றார்கள.; அவரும் யதார்த்தத்தை புரிந்து கொண்டிருப்பதால்தான் ரணிலுக்கு அப்பு வருகின்றது.

நன்றி:02.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அமைச்சர் மகன் அடாவடித்தனம்!

Next Story

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை