ஜனாதிபதி ஜீ.ஆருக்கு 73

-நஜீப்-

கடந்த திங்கள் நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கு வயது 73. அன்று அவரது ஜனாதிபதி பதவிக்கு 2வருடம் 7 மாதம் 2 நாள். 73வது பிறந்த நாள் ஓசை படாமல் ஓடிப் போனாலும் வானம் தொட வசை மொழிகள் அள்ளி எறியப்பட்டிருந்ததை பேரின சமூக ஊடகங்களில் பரவலாகப் பார்க்க முடிந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நாட்களை எண்ணிப்பாருங்கள் இந்த மனிதனுக்கு எதிராக தெருவில் நின்று இப்படி ஒருவார்த்தையை எவராவது உச்சரித்திருந்தால் அவனது நிலை என்னவாக அமைந்திருக்கும்.?இந்த இரண்டரை வருடங்களுக்குள் இந்த மனிதனுக்கு இப்படி ஒரு நிலையா?

பேரின சமூகத்தின் மத்தியில் நம்பர் வன் யூடிப் விமர்சரான இருக்கும் சட்டத்தரணி பண்டார தென்னகோன் ‘இப்படி ஒரு மனிதன் உலகில் பிறக்காமல் இருப்பதற்கு கடவுள்தான் நமது நாட்டையும் சமூகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை வரலாற்றில் இந்தளவுக்கு மக்களை நோவினை செய்த ஒரு மனிதனை நாம் எங்குமே பார்த்ததில்லை’

என்று 20.06.2022 தனது பதிவில் சொல்லி இருந்தார். இது எவ்வளவு பாராதூரமான வார்த்தை என எண்ணிப்பாருங்கள்.

நன்றி:26.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் துரோகங்கள்!

Next Story

 விமான சேவைகள் முடங்கும் அபாயம்!