ஜனாதிபதி கோட்டா அவல நிலை!    கோரிக்கையை நிராகரித்த சஜித்!!

சில வாரங்களுக்கு முன்பு நிதி அமைச்சுப் பதவியை பொறுப்போற்க ஆள் தேடித்திரிந்தார் நமது ஜனாதிபதி கோட்டா. இப்போது அவர் பிரதமர் பதவிக்கும் ஆள் தேடி ஓடித்திரிந்து கொண்டிருக்கின்றார். இதோ அந்தக் கதையைக் கேளுங்கள்:-

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

இந்த தகவலை இன்று ஞாயிற்றுக்கிழமை (08-05-2022) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க  உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் (06-05-2022) இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, தொலைபேசி அழைப்பு மூலம் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உட்பட சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டது.

அதன்பிரகாரம் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளின் படி நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

2022 MAY 4 : 50 மில்லியன் டொலர்கள்:இலங்கை கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி

Next Story

ஜீ.ஆருக்கும் எம்.ஆருக்கும்   உச்ச கட்ட மோதல் நிலை!