-நஜீப்-
சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹதுன்ஹெத்தி தனது சொந்த ஊரான தெனியாயாவுக்குப் போய் இருக்கின்றார். ஒருவர் தானாக அவரை வந்து சந்தித்திருக்கின்றார்.
அந்த நபர் ஹதுன்ஹெத்தியை நெருங்கி, கடந்த காலங்களில் நாங்கள் நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கின்றோம். ஆனாலும் ஒரு மனிதன் ஏமாற்றப்பட முடியாத அளவுக்கு ராஜபக்ஸாக்கள் எம்மை ஏமாற்றி விட்டார்கள்.
இதன் பின்னர் எக்காரணம் கொண்டும் மக்களுக்கு ஏமாறுவதற்கு அவர்கள் இடம் வைக்காமலே எம்மை ஏமாற்றி விட்டார்கள்.
எனவே இந்த நாட்டு மக்கள் சோறு உண்ணுபவர்களாக இருந்தால் அவர்களிடம் ஏமாறமட்டார்கள்.
எமது வாக்குகள் நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த முறை உங்களுக்குத்தான் என்று சொல்லி இருக்கின்றார் அந்த மனிதன்.
நன்றி 02.01.2022 ஞாயிறு தினக்குரல்