-நஜீப்-
சில நாட்களுக்கு முன்னர் மு.கா. தலைவர் ஹக்கீம் செல்வாக்கு மிக்க பத்திரிகையாளர் விக்டர் ஐவனை சந்தித்திருக்கின்றார். அப்போது இருவரும் சமகால அரசியல் பற்றி உரையாடிய போது நானும் தெரிந்து பல அரசியல் தவறுகளைச் செய்திருக்கின்றேன் என்று ஹக்கீம் ஐவனிடம் சொன்னதாக சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
அவர் இப்படி ஐவனிடம் பேசி இருப்பது ஒரு செய்தியே கிடையாது. இது போன்று பல கதைகளை நாம் ஹக்கீமிடம் நேரடியாகப் பார்த்தவர்கள். ஆனால் அவர் கதைப்படி இதன் பின்னர் தானோ தனது மு.கா.வோ அரசியல் ரீதியான தவறுகளை ஒரு போதும் செய்ய மாட்டது என்றுதான் ஐவன்-ஹக்கீம் கதைகளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இதே ஹக்கீம்தான் ரணிலை ஞானி என்றும் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் ரணிலுக்கு ஒன்றுமே புரிவதில்லை என்று சொல்லி இருந்தார். ஞானிகள் அப்படி இருப்பார்களா.? ஐவனுடன் பேசிய அந்த வார்த்தைகள் காற்றில் சங்கமிக்கின்ற அதே நொடியில் ஹக்கீம் அதனை மறுந்துவிடுவார். இதுதான் மு.கா தலைவர் ஹக்கீம்.
நன்றி: 18.12.2023 ஞாயிறு தினக்குரல்.