சு.க. அவலம்…ஐயோ சிரிசேன!

-நஜீப்-

கோட்டா-ரணில் அரசாங்கத்தை ஆதரிக்கமாட்டோம் என்று செயற்குழு தீர்மானம் எடுத்திருக்கின்றது என்று சு.கட்யின் ஒரு அறிவிப்பு வந்தது.  சில நாட்களின் பின்னர் நிபந்தனையுடன் ஆதரிப்போம் என்றார்கள். கட்சியுடன் மட்டும்தான் பேச வேண்டும் என்றார்கள். நாம் சொல்பவர்களுக்குத்தான் அமைச்சுக் கொடுக்க வேண்டும் என்றார்கள்.

ஆனால் கோட்டாவும் ரணிலும் அவர்கள் விரும்பியவர்களுக்கு அமைச்சுப் கொடுக்க மைத்திரிபல சிரிசேன  மூக்குடைபட்டார். சு.கட்சியில் இன்னும் பலர் இராஜங்க அமைச்சு பெற இருக்கின்றார்கள் என்றும் தெரியவருகின்றது. ஒரு நான்கு பேர் பல்டிக்கு விசில் அடிக்கும் வரை காத்திருக்கின்றார்கள். இந்த செய்தி சிரிசேனாவுக்கும் தெரிய வந்திருக்கின்றது.

அவரால் என்னதான் பண்ண முடியும்.? கோட்டாவும்-ரணிலும் திட்டம் போட்டு மைத்திரியை பலிவங்கி வருகின்றார்கள்.

அதற்கு அவர்கள் பக்கத்தில் நியாயங்கள் இருக்கின்றன. பொதுத் தேர்தலுக்கு முன்னரே சஜித், மைத்திரி அணிகளில் உளவளிகள் இருக்கின்றார்கள் என்று நாம் சொல்லி இருந்தோம்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 29.05.22

Previous Story

நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை -லிட்ரோவின்

Next Story

திக் திக் பயணம்! கடலில் ரஷ்யா ஆடும் கேம்!