–நஜீப்–
ஆளும் தரப்பிலிருந்து வெளியேறிய சிலர் சஜித் கூட்டணியில் ஏற்கெனவே நுழைந்து கொண்டாலும் அவர்களுக்கு அங்கு மாற்றான் தாய் மனப்பான்மை என்பதால் சிலர் அங்கு அதிர்ப்தியில் இருக்கின்றார்கள். இன்னும் பலர் ஏதாவது கூட்டணிக்குள் நுழைந்து கொள்ள எடுத்த முயற்ச்சிகள் வெற்றி பெறவில்லை.
இவர்களின் இனவாதிகளான விமால், உதய கம்மன்பில, டாக்டர் சன்ன ஜயசுமன போன்றவர்கள் முக்கியமானவர்கள். இப்போது அவர்கள் திலித் ஜயவீரவுடன் இணைந்து விட்டார்கள்.
இப்போது சாடிக்கு ஏற்ற நல்ல மூடி கிடைத்து விட்டது. ஆனால் இப்படியான இனவாதிகள் இருக்கின்ற ஒரு கூட்டணியில் இணைந்து தன்னால் செயல்பட முடியாது என்பதால் அமைப்பாளர் பேராசிரியர் அமுனுகம திலித் கூட்டணியில் இருந்து தான் ஒதுங்கிக் கொள்வதாக அவருக்குக் கடிதம் கொடுத்து புதிய கூட்டணி நிகழ்வுகளையும் பகிஸ்கரித்தும் விட்டார்.
விமல் தரப்பில் இருந்த டலஸ் வாசு போன்றவர்கள் இந்தக் கூட்டணியில் இணையவில்லை.
நன்றி: 02.06.2024 ஞாயிறு தினக்குரல்