சரியும் சஜித் கோட்டை!

-நஜீப்-

மோதல்களுக்கு மத்தியிலும் ஆளும் மொட்டு யானைக் கூட்டணி ஏதே வகையில் வலுவாகத்தான் இருக்கின்றது. ஆனால் சஜித் கோட்டையில் பாரிய சரிவுகளும் வெடிப்புக்களும் ஏற்பட்டிருப்பதை இன்று நாம் பகிரங்கமாக அவதானிக்க முடிகின்றது. தனது கட்சியில் இருந்து எவருமே ஆளும் தரப்புக்கு தாவ மாட்டார்கள் என்று முன்பு பகிரங்கமாக சஜித் சொல்லி இருந்தார்.

ஆனால் இன்று அவர் சற்றும் எதிர்பார்க்காத உயர் மட்டத் தலைவர்கள் பலர் பகிரங்கமாகவே ஊடகச் சந்திப்புக்களைப் போட்டு தமக்கு சஜித்தைவிட ரணில்தான் விசுவாசம் என்று சொல்லி இருக்கின்றார். கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரஜரட ஹெரிசன் சஜித் அணியில் இருக்கின்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தனந்த உங்கள் தரப்பில் இருந்து இன்னும் பலர் எங்களுடன் இணைந்து கொள்ள இருப்பதை மறுக்க முடியுமா என்று கேட்க அதற்கு கிரியெல்ல எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. இது எதனைக் காட்டுகின்றது.?

நன்றி: 21.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

திருந்திட்டோம் நம்புங்கோ!

Next Story

சரத் பாபு மறைவு