சம்பந்தர் உடும்புப் பிடி!

நஜீப்

திருமலையில் செயலாற்ற முடியாத ஒரு நடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். இதனால் அவருடைய சேவை மாவட்ட மக்களுக்கு முறையாகக் கிடைக்காமல் இருக்கின்றது. அவரது இடத்திற்குப் புதியவர் ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக யோசனைகள் முன்வைக்கபட்டிருக்கின்றது.

ஆனால் தான் மக்கள் ஆணையால் நாடாளுமன்றம் வந்தவன், என்னை துரத்தி விட்டு எவருக்கும் பதவியைப் பறிக்கின்ற அதிகாரம் கிடையாது என்று பெரியவர் சம்பந்தன் ஐயா யோசனையை முன்வைத்தவர்கள் முகத்திற்கே நேரடியாகச் சொல்லி விட்டதாக செய்திகள். அப்போ கடைசி மூச்சு வரை ஐயா சம் தான் திருமலை மக்களின் பிரதிநிதி என்பது ஆணி அடித்தால்போல உறுதி.

மாவட்ட வாக்களர்கள் தேவைகள் நிறைவேறுகின்றதோ இல்லையோ ஐயாவுக்கான சலுகைள் வழக்கம் போல கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். மக்கள் எக்கேடு கெட்டால்தான் அவருக்கு என்ன. அதனைக் கூட சகித்துக் கொள்ள முடியும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் செல்வாக்கு மிக்க கட்சியின் தலைமைப் பதவியில் இந்த மனிதனை வைத்து தமிழ் சமூகம் அழகு பார்ப்பது ஜீரணிக்க சற்றுக் கஷ;டமாக இருக்கின்றது.

நன்றி: 25.12.2022 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

மனைவியின் கடைசி மூச்சு: இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் செலுத்திய நன்றி 

Next Story

'நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்'  ஜனாதிபதி  ரணில் ஆலோசகர் மீது புகார்