ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பினால் ஏற்பட்டுள்ள சர்ச்சை ராஜதந்திர ரீதியில் இந்திய தரப்பினரிடம் மாத்திரமின்றி சர்வதேச நாடுகளிலும் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில்,இந்த சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னர் சுமந்திரன், சாணக்கியன் சீன தூதரை இரசியமாக சந்தித்துள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை களப்பியுள்ளதுடன், இது தொடர்பிலான ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.