ஜனாதிபதி கோட்டபாயாவிற்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டால் 5000 ரூபாய் தருவதாக சொன்னதால் நாங்கள் கலந்து கொண்டோம் என ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு ஆதரவான பேரணியை சிறிய குழுவொன்று முன்னெடுத்துள்ளது அதில் ஈடுபட்ட நபர் ஒருவர் குறித்த பேரணி தொடர்பாக சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மெலும் தெரிவித்ததாவது,
நாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் கோட்டாபய ஆதரவு பேரணிக்கு அழைத்தார்கள். 5,000 ரூபா பணம், உணவு தருவதாக சொன்னார்கள். எங்களிற்கு முஸ்லிம்களை போல தொப்பி அணிவித்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.