கொழும்பில் பிரபல நடிகை வீட்டில்  பெண்ணின் மரணத்தில் மர்மம் 

கொழும்பில்அமைந்துள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுளை – தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்திற்கு நீதி வேண்டும்” என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்துள்ளார்.

Demodara Nine Arches Bridge

ஹட்டன் – ப்ரோட்டெக் அலுவலகத்தில் நேற்றைய தினம் (19.05.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்தாவது, “கடந்த 11 ஆம் திகதி தெமோதர பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள பிரபல நடிகையின் வீட்டில் ஒரு வருட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்ட ராஜகுமாரி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தி பெரும்பான்மை வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களை கொண்ட தொழிற் சங்கத்திற்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் விசாரணை

ஏனென்றால் எமது நாட்டில் பல வருடங்களாக வீட்டு வேலைக்கு சென்று பல பெண்கள் உயிரிழந்துள்ளார்கள் ஆனால் அவர்களுக்கு சரியான தீர்வோ அல்லது பாதுகாப்போ இது வரை செய்து கொடுக்கப்படவில்லை.

மேலும், அவர்கள் தொடர்பாக பல வருடங்களாக குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்களுக்கு நியாயம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை.

குறித்த பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கணவர் தெரிவித்துள்ள போது பொலிஸ் விசாரணையில் அப்பெண் தானாக உயிர் மாய்த்து கொண்டாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.அவ்வாறு நடந்திருந்தால் அது வெட்கப்பட வேண்டிய விடயம்.

தொழில் பாதுகாப்பு இன்மை

குறிப்பாக ஏனைய துறையில் பணிபுரியும் பெண்களை விட முறைசார துறையில் தான் இன்று இந்த நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு இல்லாமையே”

எமது நாட்டிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது பொலிஸ் விசாரணைகள் வெளிபடையானதாக இல்லாத ஒரு சந்தர்ப்பம் இருப்பதாக பெருவாரியான பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பெண்ணின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நிவர்த்தி செய்ய வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும்.இந்த விடயம் குறித்து ப்ரொட்டெக் தொழிற்சங்கம் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous Story

உளவுத் துறை கண்டுபிடிப்பு!

Next Story

அமைச்சுப் பதவி தராமல் 10 பேருக்கு அநீதி!