குற்றவாளிகளை தண்டிக்கவும்!

Human fingerprints and handcuffs

-நஜீப்-

இலங்கையை பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியவர்களைத் தண்டிக்கும்படி ஐ.நா மனித உரிமை ஆணையகம் அரசாங்கத்தைக் கேட்டிருக்கின்றது. இது போன்றுதான் போர்க்குற்றவாளிகள் தொடர்ப்பிலும் இதே மனித உரிமைகள் ஆணையகம் சர்வதேசத்தை கேட்டிருந்தது.

ஆனால் இன்று வரை எதுவுமே உறுப்படியாக நடந்ததாகத் தெரியவில்லை. அதே போன்றுதான் இந்த அரசுக்கு பொருளாதாரக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டணை வழங்குமாறு கோட்பதும் பெரும் கேலிக் கூத்தாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

குற்றத்தை யார் செய்தார்களோ அவர்களைப் பதவியில் வைத்துக் கொண்டு தண்டணையை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று நாம் மனித உரிமைகள் அணையாளரிடத்தில் கேள்வி எழுப்ப வேண்டி இருக்கின்றது.

குற்றவாளிகளைக் துறத்துவோம் நாட்டை புனிதப் படுத்துவோம் என்று போராடியவர்களை அரசு வேட்டையடி வரும் இந்த நேரத்தில் மனித உரிமைகள் அமைப்பின் இந்தக் வேண்டுகோளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.?

நன்றி: 11.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கண்டி - கொழும்பு பிரதான வீதி விபத்து! உயிரிழந்தவர்கள்

Next Story

சாதனைக்கு ராஜ்ய அமைச்சு!