கானலாகும் உள்ளாட்சி தேர்தல்! 

நஜீப்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செயல்பாடுகளைப் பார்க்கின்ற போது அப்படியான ஒரு தேர்தலை நடாத்துகின்ற மன நிலையில் ஆளும் தரப்பு முக்கிய தலைவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் தெரிவிக்கின்ற கருத்துக்கள் தேர்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பது தெளிவாக சொல்லப்பட்டு வருகின்றது.

தேர்தல் தொடர்பான முக்கிய அரச அதிகாரிகளும் ஆளும் தரப்பினரின் தேர்தலுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைத்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று தமது ஜனநாயக உரிமைக்காக மக்கள் நெருவில் போராடி மடியும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே 25ம் திகதி தேர்தல் என்ற செய்தியும் கானல் நீராகத்தான் நமது பார்வைக்குத் தெரிகின்றது.

எனவே இந்தத் தேர்தல் தொடர்பில் எதிர்பார்ப்புக்களை பெரிய அளவில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பது நமது ஆலோசனையாக இருக்கின்றது. தேர்தல் தொடர்பில் பெரும் சதியென்றுதான் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

நன்றி: 12.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மீள் பிரசுரம்:பழைய மாணவர் சங்கம்

Next Story

உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பாக உள்ளதா நீங்கள் வசிக்கும் வீடு? - இதையெல்லாம் செக் பண்ணுங்க