-நன்றி கார்டியன் நியூஸ் மேல் தின (01.05.2025) இசு
நாட்டில் தேர்தல் நடக்கின்ற 338 சபைகளில் NPP வெற்றி கொண்டாலும் காத்தான்குடி நகர சபையை ஒருபோதும் அவர்களினால் கைப்பற்ற முடியாது என்று நாம் அடித்துக் கூறுகின்றோம்.

அங்கு நிச்சயம் ஹிஸ்புல்லாஹ் அணிகளுக்குத்தான் வெற்றி. நாம் அணிகள் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் அவர் நான்கு வரையிலான அணிகளை காத்தான்குடி நகர சபைக்கு களமிறக்கி அதற்கான அறிமுகத்தையும் ஓரே இடத்தில் நடாத்தி இருந்தார். இது நமது அரசியல் வரலாற்றில் புதிய வியூகம்.
இந்தத் தேர்தல் முடிந்தவுடன் மு.கா.வுக்குள் ஹக்கீம். தலைமைத்துவத்துக்கு எதிரான ஒரு கிளர்ச்சிக்கு வாய்ப்புக்கள் அதிகம். அதில் கிழக்கு சமூகம் பிரதேசவாதத்துக்கு அப்பால் ஒன்றுபட்டால் மு.கா. பேரரசராக ஹிஸ்புல்லாஹ் முடிசூடக் கூடும்.

அவர் நல்ல செல்பாட்டுக்காரர் அதே போல மிகப் பெரிய சந்தர்ப்பவாதி என்பதனை இங்கு சொல்லியாக வேண்டும். அதனால்தான் பொதுத் தேர்தலில் அனுரவைத் திட்டியவர் இன்று நேசக்கரம் நீட்டி வருகின்றார்.
இது தவிர முசலியில் ரிசாட் அணிக்கு அதிக வாய்ப்பு. பொத்துவில் பிரதேச சபை முசாரப் அணி கைப்பற்றலாம். அக்கரைப்பற்றிலும் அப்படி ஒரு நிலை. கிழக்கில் தேர்தலில் ஊர் வாதம் பிரதேச வாதம்; கொடிகட்டிப் பறக்கின்றது.





