-நஜீப்-
இன்று நாட்டில் இருக்கின்ற மிகவும் சிறந்த அரசியல் தலைவர் ஜனாதிபதி ரணில்தான். இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. வருகின்ற தேர்தலில் அவர் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிக்கு வருவார். அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இப்படி ரணிலுக்கு சான்றிதழ் கொடுப்பவர் இன்று ஆளும் தரப்பில் இருக்கின்ற ஜனரஞ்சகமான அமைசசர் காஞ்சன விஜேசேக்கர.
இவர் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். எனவே இவர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்காக களமிறங்குவது என்பது இந்தக் கதையில் நமக்குப் புரிகின்றது. அவர் இப்படிப் பேசுவதில் ஒரு இரகசியம் இருக்கின்றது என்பது நமது கருத்து. பதவியில் இருக்கின்ற வரைக்கும் ஜனாதிபதி ரணிலை உச்சிக்கு ஏற்றி அவரைத் திருப்திப்படுத்தி தனது அமைச்சை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு முயறசிதான் இது.
மொட்டுத் தரப்பில் ஒரு அணி ரணிலுக்காகவும் மற்றும் ஒரு தரப்பினர் ராஜபக்ஸாக்களுக்காகவும் பேசுவது திட்டமிட்ட ஒரு நாடகம் என்பதற்கு இவை எல்லாமல் நல்ல உதாரணம். மொட்டுக் கட்சியினர் ரணிலை புலி வாலாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நன்றி: 02.07.2023 ஞாயிறு தினக்குரல்