கல்முனை :ஒன்றுகூடலும், கௌரவிப்பும்

– பாறுக் ஷிஹான், சர்ஜுன் லாபீர் –

கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Moon Gloaming   2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை (15) பி.ப 4.00 மணியளவில்  ஆரம்பமாகி இரவு  9 மணிவரை கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்   ஓய்வு பெற்று, இடம் மாற்றலாகிச் சென்ற மற்றும் அலுவலகத்தில் சிறப்பாக கடமையாற்றிய உத்தியோகத்தர்கள்  கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான  நினைவு சின்னங்கலும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம் .ஏ .டக்லஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும்   கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதலவர் ஏ.எம்.ரக்கீப் , அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Story

மலராத பூக்கள்: தொழிலாளர்களுக்கு சிறை!

Next Story

அணு ஆயுத போர் வெடிக்க வாய்ப்பா?