கதைவிடும் சஜித் செயலாளர்!

-நஜீப்-

சஜித் அணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மொணராகலையிலிருந்த நாடாளுமன்றம் வந்தவர். நிதானமான மனிதன் என்றுதான் நாம் அவரை நினைக்கின்றோம்.

ஆனால் அவரும் ஜனாதிபதி ரணிலைப் போல் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஊடகங்களுக்குப் பேச ஆரம்பித்திருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு உறுப்பினர்களோ தமது கூட்டணியில் இருப்பவர் எவரேனும் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை என்று கூறி இருக்கின்றார்.

ஆனால் தேர்தலுக்கு முந்திய நாள் அவரது கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவர் இந்தத் தேர்தலில் நிச்சயம் ரணில்தான் வெற்றி பெறுவார் என்று கூறி இருந்ததுடன் தேர்தலுக்குப் பின்னர் அரசு அமைக்க எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் அதே தலைவர் கூறி இருக்கின்றார்.

அப்படியானால் அவரது கட்சி டலஸூக்கு வோட்டுப் போட்டது என்றா செயலாளர் சொல்ல வருகின்றார்.?

செயலாளர் நடத்திய ஊடகச் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் நீங்கள் யாரை ஆதரிக்கின்றீர்களோ அவர் மண்கவ்வி விடுகின்றாரே என்று கேட்டதற்கு அப்படி இல்லை என்று சொல்லி சமாளித்திருக்கின்றார்.

நன்றி:24.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரணிலும்  ஓட நேரிடும்- மஹேல 

Next Story

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பிணை