இம்மாதம் முதல் 22 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 521 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டங்களில் 475 பேர் பதிவாகியுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை 2983 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெங்கு கொசுக்களின் அடர்த்தி பிரிட்டோ குறியீட்டில் 5ஐ தாண்டி 15ஐ எட்டியுள்ளது என்றும், ஆங்காங்கே பெய்து வரும் மழையால் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்காவிட்டால் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளது