ஒரு பில்லியன் டொலர்களுக்காக இந்தியா பயணமான பசில்!

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு பயணமானார். இலங்கைக்கு அவசரத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்காகவே அவர் இந்தியாவுக்கு செல்கிறார்.

கடந்த வாரம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கையின் நிதியமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, இந்த பயணம் உறுதிச்செய்யப்பட்டது.இந்த உரையாடலின் போது, ​​இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

Previous Story

உக்ரைன் தலைநகரில் குடியிருப்பு கட்டடங்களை தகர்த்ததால் பெரும் பரபரப்பு

Next Story

ஒன்றரை வயதான குழந்தை உலக சாதனை!!!