அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக 2009 – 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பராக் ஒபாமா, 60. இவர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், என் மனைவி மிச்செலுக்கு தொற்று ஏற்படவில்லை. நான் தனிமையில் உள்ளேன். அமெரிக்கர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஒபாமா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். ஹவாய் தீவில் சில மாதங்களாக ஓய்வு எடுத்த ஒபாமா குடும்பத்தினர், சமீபத்தில் தான் வாஷிங்டன் திரும்பினர்.