துருக்கிய தேர்தல் வாக்களிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி முடிவடைந்து வாக்கெடுப்பு எண்ணும் பணிகள் தீவிரமாகியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி எர்துகான் வாக்கு எண்ணும் அடிப்படையில் முன்னணி வகிப்பதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பெரும்பாலும் எர்துகானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் துருக்கி நாட்டில் 3 ஆவது முறையாகவும் அதிபராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.