செய்தி எரிபொருள் கதை ஏமாறாதீர்! July 10, 2022 -நஜீப்- 10.07.2022 முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான எரி பொருள் நாட்டுக்கு வருகின்றது. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் எதிரணியினர் மக்களைக் வீதிக்கு அழைக்கின்றார்கள் என்று புதிதாக ஆளும் தரப்புக்குப் போய் அமைச்சுப் பெற்றுக் கொண்ட மனுஷவும், ஹரினும் முதல் நாள் (05.07.2022) நாடாளுமன்றத்தில் கதை சொன்னார்கள். ஆனால் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன அடுத்தநாள் (06.07.2022) 23ம் திகதிக்குப் பின்னர்தான் எரிபொருள் கப்பலை எதிர்பார்க்க முடியும் என்று சொன்னார். அதில் கூட நம்பகத் தன்மை கிடையாது. எனவே அமைச்சர்கள் வாய்க்கு வருவதை எல்லாம் போசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று நாங்கள் குடிகளிடத்தில் ஒருவார்த்தை சொல்லி வைக்க விரும்புகின்றோம். இந்தியா கூட இலங்கைக்கு உதவுகின்ற விடயத்தில் மூச்சுவாங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல். அவர்களுக்கும் போதும் என்ற நிலையாம்.! மேலும் இந்த அரசுக்கு ஆயுல் கம்மி, இவர்களுடன் கொடுக்கல்வாங்கல் செய்வது ஆபத்து என்று அவர்கள் கணக்குப் பார்ப்பதாகவும் தகவல். நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 21, 2024October 21, 2024 தூள் பறக்கும் அதிரடி அரசியல் கட்டுரைகள்! October 21, 2024October 21, 2024 டி20 பெண்கள் உலகக் கோப்பை நியூசிலாந்து வசம் October 21, 2024October 21, 2024 கடவுச்சீட்டு வரிசைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அநுர அரசு October 20, 2024October 20, 2024 NPP வேட்பாளர்கள் தமது நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்கள்! October 20, 2024October 21, 2024 முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி October 20, 2024October 20, 2024 ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம் Previous Story களத்துக்கு வரும் காத்தனார்! Next Story 'நீதி'
October 20, 2024October 21, 2024 முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி