எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் மன்னித்து உங்களுடன் இணைந்துநிற்கின்றேன்!

எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் நாட்டை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்தவண்ணமிருக்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவருக்கும். நான் உங்களை மன்னித்து உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்துநிற்கின்றேன்.

ஐக்கியப்படவேண்டிய தருணம் இது. மாற்றத்திற்காக குரல்கொடுக்கும் மில்லியன் கணக்கான குரல்களின் எதிரே எதனாலும் நிற்கமுடியாது எனவும் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார்.

 

Previous Story

HOT NEWS

Next Story

இலங்கை : ஜனாதிபதி கோட்டா செய்த தவறுகள்: அடுத்து என்ன நடக்கும் ?