-நஜீப்-
தற்போது நமது நாட்டில் நடக்கின்ற அகிம்சை வழியிலான ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம் முழு உலகத்தாரினதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
சர்வதேசம் ‘கோ ஹோம் கோட்டா’ கிராமத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், ராஜபக்ஸ விசுவாசிகள் திட்டம் போட்டு அதன் மீது தாக்குதல் நடத்தி இன்று சர்வதே சமூகத்தின் முன் மூக்குடை பட்டிருக்கின்றார்கள்.
இது தனது கட்சியில் இருந்த முட்டால்கள் சிலர் பார்த்த வேலை என்பதனை ஆளும் தரப்பு முக்கியஸ்தர் டலஸ் அலகப்பெரும பகிரங்கமாக ஒத்துக் கொள்கின்றார்.
இதன் மூலம் மொட்டு அணி மேலும் பிளவு பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இலங்;கையில் நடக்கின்ற இந்த அகிம்சைப் போராட்டம் உலகிற்கு எதிர் காலத்தில் ஒரு வழிகாட்டலாக-மொடலாக அமைலாம்.
மஹிந்த அணித் தாக்குதல் மூலம் இந்த இளைஞர் படை நாட்டில் அபாரித சக்தியாக மாறி விட்டது. இதன் பின்னர் நாட்டில் டீல் அரசியலுக்கு ஆப்பு வருகின்றது. என நம்பலாம்.
நன்றி: 25.05.202 ஞாயிறு தினக்குரல்