-யூசுப் என் யூனுஸ்-
சில தினங்களில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் துவங்கப்பட்ட உக்ரைன்-ரஸ்யா போர் இன்று வருடத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. ரஸ்யாவுக்கு ஈரான் வட கெரியா போன்ற நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்து உதவி வருகின்றன.
இந்த உக்ரைன்-ரஸ்யப் போரானது அமெரிக்க-ரஸ்யா ஆதரவு நாடுகளின் ஆயுதப் பயிற்சிக் களமாகவும். அமெரிக்கா-ரஸ்யா அணிகளுக்கிடையேயான கௌரவப் போர்க் களமாகவும் மாறி இருக்கின்றது. எமது பார்வையில் இந்தப் போரில் வெற்றி கொள்ளும் அணியே அடுத்து வருகின்ற தசாப்தங்களின் உலக வல்லாதிக்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.
தற்போது இந்தப் போரில் உக்ரைனுக்கு உதவிய பல ஐரோப்பிய நாடுகள் சலைத்து விட்ட நிலையில் தமது உதவிகளை குறைத்துக் கொள்ள முனைகின்றன. இது நேட்டோ நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மேலும் சீனா இந்தப் போரில் மறைமுகமாக ரஸ்யாவுக்கு உதவி வருகின்றது.
மேற்கத்திய ஊடகங்கள் போர் தொடர்பில் உக்ரைனுக்கு சாதகமாக செய்திகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றன. அணை உடைந்து கண்ணி வெடிகள் வெள்ளத்தில் இப்போது அங்கே மிதந்து கொண்டிருக்கின்றன.
நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்