ஈஸ்டர் தாக்குதல்! ஹேமசிறி விடுதலை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹேமசிறி பெர்ணான்டோ மீதான அனைத்து குற்றச்சாட்டுகக்ளிலும் இருந்து அவரை விடுவித்து விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக  தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச் சாட்டுகளில் சட்டமா அதிபர் இவருக்கு எதிராக   வழக்குகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஒலிம்பிக் ஊக்கமருந்து பரிசோதனை எப்படி நடக்கிறது?

Next Story

தேர்தல் வாக்குறுதி: வெப்பநிலை குறைக்கப்படும்!