இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடு காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன தனது வெளிவிவகார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக அவர் ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மற்றுமொரு வெளியுறவு அமைச்சர் பதவி விலகியுள்ளார்.