-நஜீப் பின் கபூர்-
உள்ளே வந்தாலும் தள்ளி நின்று கொள் உபசரிப்பு!
தெற்கு சமயலுக்காக தமிழர் கருவேப்பிள்ளை சப்ளை!
தமிழர்களின் அரசியல் பற்றிப் பார்க்க முன்னர் தெற்க்கில் என்ன நடக்கின்றது என்பதனை சற்றுப் பார்ப்போம். தேர்தலுக்கு ஆப்பு வைத்து விட்டு இன்னும் சில காலத்துக்கு கதிரையில் இருக்க ஜனாதிபதி ரணில் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் அனைத்துத் தரப்பினரும் தேர்தல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
ஆளும் தரப்பு என்று பார்க்கின்ற போது மொட்டுக் கட்சி பிரதான சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றது. அதே மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ஒரு தொகையினர் ரணில் விசுவாசியாக இருக்கின்றார்கள். இதனால் ஆளும் தரப்புக்குள் ரணில்-ராஜபக்ஸ தரப்பு என்று பிளவுகள். என்றாலும் நாடாளுமன்னத்தில் பிரேரனைகள் என்று வரும்போது இந்த இரு தரப்பினரும் ஐக்கியமாகி ஆளும் தரப்பை காப்பற்றி விடுகின்றனர். இதனால் இது ஒரு நாடகமே என்று நாம் தொடர்ந்தும் கூறுகின்றோம். அங்கு ஏதோ டீல்.
அவர்களின் அந்த இணக்கபாடுகளும் முரண்பாடுகளும் அப்படி இருக்க முதலில் பொதுத் தேர்தல்தான் நடக்க வேண்டும் என்ற பசிலின் கோரிக்கை இதுவரை வெற்றி பெறவில்லை. இப்போது ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் என்ற எதிர்பார்ப்பு மேலாங்கி இருக்கின்றது. அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்ப்பில் இன்றும் ஒருமித்த கருத்து இல்லை.
அப்படி இருந்தாலும் ரணில், தம்மிக்க, நாமல், என்று அங்கு ஒரு உச்சரிப்பு. இதில் ரணில் விசுவாசிகள் குறிப்பாக இன்று ரணிலால் பிழைத்துக் கொண்டிருக்கின்ற ஐதேக.காரர்களும் அரசில் பதவிகளால் அலங்கரிக்கப் பட்டிருப்பவர்களும் ரணிலுக்குத்தான் வாய்ப்புக் வேண்டும் என்று கேட்கின்றனர். மொட்டுக் கட்சியில் இருக்கின்ற ராஜபக்ஸ விசுவாசிகள் தம்மிக்க பெரேராவுக்கு அல்லது நாமலுக்குத்தான் வாய்ப்புக் வேண்டும் என நிற்கின்றார்கள்.
இந்த நிலையில் இருதரப்பினரும் தமது பிரச்சாரங்களைத் துவங்கி இருக்கின்றார்கள். ரணிலுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டுமானால் சஜித் அணியில் இருந்து குறைந்தது இரண்டு டசன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணில் தனது அணிக்கு கொண்டு வரவேண்டும் எனக் காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு ரணில் ஓகே என்றார். ஆனால் இதுவரை ஒருவர் கூட அவருடன் வந்து சேரவில்லை.
இன்று வருகின்றார்கள் நாளை வருகின்றார்கள் என காலம் கடத்திக் கொண்டு போகின்றார். எனவே இதனால் ஆளும் தரப்பில் ரணில் வேட்பாளர் என்பது குதிரைக் கொம்புதான். என்றாலும் பிரசன்ன ரணதுங்ஹ, மஹிந்தானந்த, காஞ்சன, சேமசிங்ஹ போன்றோர் அந்த முயறச்சியில் தொடர்ந்தும் இருக்கின்றார்கள். நமது இந்தப் கூட்டணிக்கு இன்னும் பலர் வந்து இணைந்து கொள்ள இருக்கின்றனராம். அறுபதுவரையிலான மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் சஜித் தரப்பில் இருபது சுதந்திரக் கட்சியில் ஒரு தொகை ரணிலுக்கு ஆதரவாம்.
கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என ரணிலின் நெருங்கிய சகா சாகல ரத்நாயக்க தெரிவிக்கின்றார். இந்த கூட்டணிக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியை ரவி கருணாநாயக்க கவனித்து வருகின்றார். சஜித்தை பிரதமராக்கி ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக்குவது தொடர்பாக ஐதேக. சஜித் பிரேமதாசவுக்கு விட்ட தூதை அவர் எடுத்த எடுப்பிலே நிராகரித்து விட்டார்.
மொட்டுக் கட்சியும் இப்போது தனது தேர்தல் பணிகளை நாமலை முன்னிருத்தி நடாத்திக் கொண்டு போகின்றது. இது இரண்டாவது கூட்டணி. இது யார் ஜனாதிபதி வேட்பாளரானாலும் நாமலின் அரசியல் எதிர்காலத்தை மையமாக வைத்துத்தான் நகரும். அதுதான் மொட்டு அரசியல். அவர்கள் பல இடங்களில் கூட்டங்களை நடத்தினாலும் அங்கு ஒரு குழப்ப நிலை தெரிகின்றது.
அடுத்து பிரதான எதிர்க் கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி. அரசியல் அரங்கில் இது ஓரளவுக்கு வலுவான நிலையில் இருக்கின்றது. அதில் சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதி வேட்பாளர். அவருக்குப் போட்டியாக அங்கு எவரும் இல்லை. அந்த அணியில் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு வேட்பு மனுவும் அதில் அவர்களது தனிப்பட்ட வெற்றிகளுமே பிரதானமாக இருக்கின்றன. எனவே ஒட்டிக் கொள்ள வருபவர்களிலிடத்தில் பெரிய வாக்கு வங்கி கிடையாது. சிறுபான்மை தனித்துவக் கட்சிகள் ஓரளவுக்கு அங்கு வாக்குகளை வைத்திருக்கின்றன.
இந்த முறை சிறுபான்மை சமூகங்களும் மாற்றமாக சிந்திக்கின்ற ஒரு நிலை தெரிகின்றது. எப்படி இருந்தாலும் சஜித் ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஒரு நம்பிக்கையான வேட்பாளர் என்பதனை மறுக்க முடியாது. ஆனாலும் அந்த அணிக்குள் நிறையவே வெட்டுக் கொத்துக்கள். அவை அதிகாரம் மிக்க அமைச்சுக்களை-பதவிகளை அடைவதை மையமாகக் கொண்டவை. மேலும் தலைவரை தமது கட்டுப்பட்டில் வைத்தக் கொள்வதற்கு அங்கு கடும் போட்டி நிலை. புதிய வரவுகள் உள்ளே வந்தாலும் தள்ளி நில்லு என்ற அளவில்தான் வைத்துக் கொள்ளும் உபசரிப்பு அங்கு பகிரங்கமாகத் தெரிகின்றது.
மூன்று சத வீதம் என்று எதிரிகளால் நையாண்டி பண்ணப்பட்ட ஜேவிபி.-என்பிபி. இன்று மக்கள் மத்தியில் ஊடுவி வியாபித்து நிற்க்கின்றது. எல்லா அரசியல் கட்சி மேடைகளிலும் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதற்கே பிரதான கட்சிகள் காலத்தை செலவு செய்துகின்றன. இதனால் அந்தக் கட்சிக்கு இலவசமாக ஒரு பெரும் பிரச்சாரம் கிடைக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் அவர்கள் தமது பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். எனவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி. தனது கவர்ச்சிகரமான வேட்பாளர் அணுரகுமாரவை நம்பிக்கையுடன் களமிறக்குகின்றது. அங்கு அவர்கள் கூட்டணியில் கட்சிகளுக்கு இடமில்லை. தனி நபர்கள் என்பிபி.யில் வந்து இணையலாம்.
இது தவிர செல்வாக்குடன் இருந்த சுதந்திரக் கட்சி இன்று சீரழிந்து தனது சட்ட உரிமைகள் தொடர்பாக நீதி மன்றில் அடிதடிப்பட்டு நிற்க்கின்றது. அங்கு பல குழுக்கள். அணுரா யாப்பா சுசில் பிரேம்ஜயந், லன்சா ஆகியோர் அண்மையில் தெற்கு அம்பலந்தோட்டையில் ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். அமரவீர ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு ஆறாயிரம் பேர்வரை வந்திருந்தார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாம்தான் தீர்மானிக்கின்ற சக்தி என்பது அவர்கள் நம்பிக்கை. கூட்டத்தில் பத்தொன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். ராஜபக்ஸாக்களின் அரசியலில் இருந்து ஒதுங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு தங்குமிடம் எனலாம்.
குமார் குணரத்தனத்திள் முன்னிலை சோசலிஸ முன்னணியினரும் வருகின்ற தேர்தலுக்காக ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். ஐஎம்எம், மற்றும் இந்திய எதிர்ப்பை முன்னிருத்தி அமைய இருக்கின்ற இந்தக் கூட்டணியில் கோட்டாவை விரட்ட காலிமுகத்திடல் போராட்டம் நடாத்திய சிலரும் இணைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. இது தவிர ஏற்கெனவே பரப்புரையை துவக்கி இருக்கின்ற திலித் ஜனவீர இப்போது அணுரகுமர பாணியில் அவுஸ்திரேலியாவில் பரப்புரையில் இருக்கின்றார். இன வெறியர்களை உள்வாங்கியதால் அவருடன் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.;.
இப்படி கூட்டணிகள் பூத்துக் குழுங்கிக் கொண்டிருந்தாலும் டலஸ், வாசு, தயாசிரி போன்றவர்கள் இதுவரை எந்த அணியிலும் இணைந்து கொள்ளாமல் வெளியே இருக்கின்றார்கள். இவர்களை சஜித் அணியில் இணைத்துக் கொள்ள ஒரு முயற்சிகளும் நடப்பதாக ஒரு தகவல். இவர்கள் அந்த முகாமுக்கு நுழையும் போது அது அங்கிருக்கின்ற சிலருக்கு வலியையும் கொடுக்கும். சம்பிக்க, பொன்சேக்க போன்றவர்களும் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றார்கள்.