இந்தியா: பெட்ரோல் + டீசல் + கேஸ் தட்டுப்பாடு உதவும் அமீரகம்! 

 ஈரான் மீதான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை முடங்கி உள்ளது. இதனால் நம் நாடு பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகத்துடன் இடையே கச்சா எண்ணெய், எல்பிஜி கேஸ் உள்ளிட்டவற்றின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கினர். முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபியில் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.

இந்த வேளையில் இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி எரிசக்தி, ராணுவம், , உள்கட்டமைப்பு துறைகள் சார்ந்து முககிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும் கூட பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை. உலகளவில் தினமும் 20 சதவீத கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் இந்த ஜலசந்தி வழியாக தான் நடக்கும்.

தற்போது அது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி முன்னிலையில் இன்று 3 முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் ஒப்பந்தம்

ஈரான் பதற்றத்துக்கு நடுவே கச்சா எண்ணெய், கேஸ் விநியோகச் சங்கிலி தடங்கல்களை சமாளிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்திய பெட்ரோலிய இருப்பு நிறுவனம் (ISPRL) மற்றும் அமீரகத்தின் அட்னாக் (ADNOC) நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது.

ஒப்பந்த்தின்படி இந்தியாவில் பூமிக்கடியில் உள்ள அவசரகால சேமிப்பு கிடங்குகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கச்சா எண்ணெய் சேமிப்பு அளவு உயர்த்தப்படுகிறது.

கச்சா எண்ணெய் சேமிப்பை 30 மில்லியன் பேரல்களாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டாலோ அல்லது சர்வதேச சந்தையில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டாலோ, இந்தியாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ள முடியும்.

India, UAE finalise defence, energy and shipping pacts worth $5 billion during Modi's Abu Dhabi visit | India News

அதேபோல் கேஸ் தேவையிலும் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது. அதன்படி நம் நாட்டில் சமையல் எரிவாயு தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய உள்ளது. ஏனென்றால் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ (IOCL) மற்றும் அமீரகத்தின் ‘அட்னாக்’ (ADNOC) நிறுவனங்களுக்கு இடையே முன்னுரிமை அடிப்படையில் LPG கேஸ் வழங்குவதற்கான ஒப்பந்தமாக இது கையெழுத்தாகியுள்ளது.

நம் நாட்டின் ஒட்டுமொத்த எல்பிஜி தேவையில் சுமார் 40 சதவீதத்தை அமீரகம் தான் வழங்கி வருகிறது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், சர்வதேச சந்தையில் கேஸ் விலை திடீரென உயர்ந்தாலும் இந்திய மக்களுக்கு விலை உயர்வின் பாதிப்பு ஏற்படாமல் உறுதி செய்யும்

இரண்டவாது Defence Cooperation சார்ந்த ஒப்பந்தமாகும். இருநாடுகள் இடையே பாதுகாப்பு துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவது தான் இதன் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகள் இடையேயான வழக்கமான ராணுவப் பயிற்சிகளைத் தாண்டி, நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிப்பது, உளவு தகவல்களை பரிமாறி கொள்வது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒன்று சேர்ந்து மேற்கொள்வது உள்ளிட்டவை அடங்கும்.

PM Modi UAE visit: India signs energy, defence and investment pacts with UAE amid Middle East crisis | Politics - PTC News

3வது ஒப்பந்தத்தின் பெயர் Infrastructcur Developement சார்ந்தது. குஜராத்தின் வதினார் பகுதியில் கப்பல் பழுதுபார்க்கும் மையத்தின் மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் முக்கியமான ஒப்பந்தம் என்பது Energy Security தான். ஏனென்றால் தற்போது நம் நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி, எல்என்ஜி கேஸ் விலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிக்கன நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இப்படியான சூழலில் இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

நம் நாடு மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% – 90% சதவீதத்தையும், கேஸ் தேவையில் 50 சதவீதத்தையும் இறக்குமதி தான் செய்கிறது. இதில் மத்திய கிழக்கு நாடுகள் தான் முக்கிய பங்காற்றுகின்றன.

கச்சா எண்ணெய் ஒட்டுமொத்த இறக்குமதியில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்கு 54 சதவீதமாக உள்ளது. அதேபோல, எல்பிஜி (LPG) இறக்குமதியில் 90 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் 8-10 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. தற்போது அந்த நாடு ‘ஓபெக்’ அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளது. இதனால் கூடுதலாக ஐக்கிய அரபு அமீரகத்தால் நமக்கு கச்சா எண்ணெய் வழங்க முடியும்.

அதோடு ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருந்தாலும் ஹப்ஷான் – புஜைரா குழாய்த்திட்டம் (ADCOP – Habshan-Fujairah Pipeline): அபுதாபியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து ஓமன் வளைகுடாவில் (Gulf of Oman) அமைந்துள்ள புஜைரா (Fujairah) துறைமுகத்திற்கு குழாய் வழியாக கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு தர முடியும். இதனால் இந்த ஒப்பந்தம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் நம்நாட்டின் எல்பிஜி, எல்என்ஜி கேஸ் தேவையை பூர்த்தி செய்வதில் கத்தாருக்கு அடுத்து 2வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து இருந்து சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் போல் கேஸை குழாய் வழியாக அமீரகத்தால், இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியாது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தால் மட்டுமே கேஸ் சப்ளையை ஐக்கிய அரபு அமீரகத்தால் இந்தியாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

புரட்சித் தலைவர் புரட்சித் தளபதி அசலும் நகலும் எதிர்பார்ப்புகளும்!

Next Story

சீனாவில் டிரம்புக்கு பாதுகாப்பு கொடுக்க மறுப்பு!