‘இது’ கல்யாணப் பரிசு!

-நஜீப்-

இந்த வாரம் சமூக ஊடகங்களில் சக்கை போடு போடுவது பிரதமர் எம்.ஆர். பக்கட்டில் கை வைத்த கதை. அதனை என்னதான் மறைத்துப் பேச அரசும் அரச சார்பு ஊடகங்களும் முயன்றாலும். அதுதான் இன்று நாட்டில் ஹிட்டான செய்தியாக இன்று வலம் வருகின்றது. இதில் கூட பிரதமருக்கும் ரணிலுக்கும் என்ன நெருக்கம் என்று பாருங்கள்.

சம்பந்தப்பட்ட நபருடைய கல்யாணத்துக்கு இரு முக்கிய விஐபி.களுடைய கடித உரைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை மணமகன் பிரித்துப் பார்த்த போது லோக்குவுக்கு அந்த இருவரும் கல்யாணப் பரிசாக ரம்மியமான ஹப்புத்தலை கட்சி அமைப்பாளர் பதவியை வழங்கி இருக்கின்றார்கள். தீர்மானம் எடுப்பதில் ஜூனியர், தந்தை சபாநாயகரிடம் போக.

லோக்குவின் லோக்கு..! நீங்கள் இப்போது பெரிய மனிதன். முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விட்டதாம் அந்தப் புன்னியவான். மாப்பிள்ளை தந்தையின் பசுமை அணிக்கு ஆப்பு வைத்து, மொட்டுப் பக்கம் சாய்ந்த இடத்தில்தான் இந்த அசிங்கத்தைப் பார்த்து இரு அப்பச்சிகள் முகத்திலும் கரியை பூசி இருக்கின்றது.

-நன்றி: ஞாயிறு தினக்குரல் 30.01.2022

Previous Story

ஜனாதிபதிக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவுரை: போட்டுக் கொடுக்கின்றாரா பேச வைக்கப் படுகிறாரா?

Next Story

இருளில் மூழ்குவது தவிர்க்க முடியாத ஒன்று - அமைச்சர்