–நஜீப்–
மஹிந்த பிரதமர் பதவியை விட்டுத் தலைதெரிக்க ஓடக் காரணமான மே 9 நாள் நிகழ்வுகள் பற்றி பல இரகசியங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. இது அண்ணன் தம்பிக்கு இடையிலான சண்டை. இதில் தiயிட்டு நாம் வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ளத் தேவையில்லை.
கோட்டா கமவுக்குப் போகின்ற கூட்டத்தை தடுக்கவோ தாக்கவோ வேண்டாம் என்று பொலிஸ் மேல் அதிகாரிகள் தனக்கு ஆலோசனை கூறினார்கள் என்று, மேல் மாகாணப் பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆணைக்குழு முன் வாக்குமூலமே கொடுத்திருக்கின்றார்.
பாதுகாப்புச் செயலாளர் கமல் குனரத்னாவும் அதே நிலைப்பாட்டில் தாக்குதலுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்று கூறி இருக்கின்றார் என விஜித ஹேரத் நாளுமன்றத்தில் குறிப்பிடார்.
முட்டால்கள் சிலர் பார்த்த வேலையால் பிரதமர் பதவி விலகித் தலைமறைவு வாழ்கைக்குப் போக வேண்டி வந்தது. இப்போது இருபக்கத் தாக்கதல் கைதுகள் பற்றி கடும் விமர்சனம். சர்வதேச அமைப்புக்களும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்பி வருகின்றன.
நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 22.05.22