-நஜீப்-
(நன்றி: 13.10.2024 ஞாயிறு
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் நாம் முன்கூட்டி எதிர்பார்த்ததாக இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் இதில் நெருக்கடிக்கு இலக்கானவர்கள் சிலரும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் அர்ஷத டி சில்வா.
அவர் என்னதான் சஜித் அணியில் பணிகளை மேற்கொண்டு வந்தாலும் அவர் ரணிலின் கையாள் என்ற ஒரு சந்தேகம் கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கின்றது. தலைவர் சஜித் தன்னை சந்தேகிக்கின்றார் என்ற ஒரு அச்சமும் அர்ஷவுக்கும் இருக்கின்றது.
அவர் தேர்தலுக்குப் பின்னர் ஐமச.யின் தலைமையை பிடிக்க முனைகின்றார் என்ற ஒரு கதை. இது தன்னை அரசியலில் இருந்து ஒழித்துவிடும் ஒரு முயற்சி என்று அர்ஷ கூறுகின்றார்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமைப்பாளராக இருக்கும் கோட்டே தொகுதியில் ரணில் இரண்டாம் இடத்துக்கும் சஜித் மூன்றாம் இடத்துக்கு வந்ததால் இந்த சந்தேகம் மேலும் வலுவடைகின்றது.
அண்மையில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் தன்னை தேர்தலில் தோற்கடிக்க சதி நடக்கின்றது என்று அசாதாரணமாக அவர் விட்ட அலரல் இன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.