-நஜீப்-
இன்னும் இரண்டு நாட்களின் நாட்டில் மிகப் பெரிய பல்டிகள் நடக்க இருக்கின்றன என்று பேரினத்து ஊடகங்களும் சமூக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டு வருகின்றன. ஆனால் நமக்கு இந்தத் தகவல்கள் தொடர்ப்பில் பெரிய நம்பிக்கைள் கிடையாது.
அவர்களின் கதைகளின் படி ஆளும் தரப்பில் இருக்கின்ற பலர் சஜித் அணிக்கும் சஜித் அணியில் இருக்கின்ற சிலர் ரணில் அணிக்கும் குரங்குப் பாய்ச்சல் என்று தகவல். இதில் அர்ஷ த சில்வா எரான் விக்கிரமரத்ன மைத்திரி ஆட்கள் சிலர் என்றெல்லாம் கதைகள் உலாவி வருகின்றன.
ரணில் இருப்பு இன்னும் சில காலத்துக்கு உறுதி என்றால் ஆளும் தரப்பில் இருந்து தவல்கள்; என்ற கதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சஜித் அணியில் இருக்கின்ற பலர் ஏற்கெனவே ரணிலின் ஏஜெண்டுகள் என்பதனை நாம் ஏற்கெனவே பல முறை பெயர் வரியாக சொல்லி இருக்கின்றோம்.
அது சாத்தியம்தான். சுதந்திரக் கட்சியில் சந்திரிக்கா அணியில் வெல்கமவும் ரணில் விசுவாசியாக இன்று பேசி வருகின்றார் என்பதை அவதானிக்க முடிக்கின்றது.
நன்றி: 02.04.2023 ஞாயிறு தினக்குரல்