அரசை எதிர்த்தால் சிறை-எஸ்.பி. திஸாநாயக்க

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உரப் பிரச்சினையைப் பார்த்தால் யூரியாவைக் கொடுக்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனாலும், இயற்கைப் பசளையே சிறந்தது.அடுத்து இப்போது பேசப்படும் விடயம் டொலர் பற்றாக்குறை. இந்தப் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.
நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை.
அதற்காகப் போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.நமது நாட்டுக்கு இப்போது முக்கியமாகத் தேவைப்படுவது வெளிநாட்டு பங்களிப்பு. எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு ஜனவரியில் தீர்வு கிடைக்கும்” – என்றார்.

Previous Story

அரபாத் 50 வருடப் பூர்த்தி விழா 2023

Next Story

ஜேம்ஸ் வெப்: மிகப் பெரிய விண்வெளி தொலைநோக்கி