தற்போதைய அமைச்சரவையே தோல்வியைத் தழுவியுள்ளது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்த காரணத்தினால் ஒட்டுமொத்த நாடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமைச்சரவைக்கு துறை தொடர்பில் தெரிந்த அனுபவமுடையவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
புதிய அமைச்சரவை ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக புதிய பயணமொன்றை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். TW