-நஜீப்-
(நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்)
நமது நாட்டு அரசியல்வாதிகள் அண்மைக் காலமாக இருந்து நமது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் பகிரங்கமாக கொள்ளையடித்து வந்திருக்கின்றார்கள் என்பதனை மக்கள் இப்போது தெளிவாக பார்த்து வருகின்றார்கள்.
இந்தக் கொள்ளையர்களை தமது வாக்குகளினாலே நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, குடிகள் இந்த அநியாயத்தை தமக்கே செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு வகையில் இது தற்கொலை.
கடந்த அரசாங்கத்தில் இருந்த ஒரு அமைச்சருக்கு தலா மூன்று சொகுசு வாகனங்கள். அதற்கு மாதமொன்றுக்கு 2250 லீட்டர் பெற்றோல் வசதி.
அமைச்சர் ஒருவருக்கு பதிணைந்து தனிப்பட்ட அதிகாரிகள். அவர்களுக்கு மேலும் மூன்று வாகனங்கள். 240 லீட்டர் பெற்றோல். மற்றும் சம்பளம். இவர்களில் அனைவரும் போல அமைச்சரின் உறவுகள்.
முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் முன்பு 170 பேர் வேலை. இன்று 70 பேர். அன்று அதிகாரிகள் 16. இன்று 6. பேர். அன்று 20 பணிப்பாளர்கள் இன்று 4. இப்படியாக ஜனாதிபதி அனுர தனது முன்மாதிரியை காட்டி வருகின்றார். என்பதும் குறிப்பிடத்தக்கது.