அனுரவுக்கு அடங்க மாட்டேன்-காரியப்பர்

-நஜீப்-

(நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்)

சில தினங்களுக்கு முன்னர் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தலைவர்களின் கூட்டமொன்று ஐமச. செலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு பேசிய மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் இப்போது இங்கு பேசுகின்றவர்கள் அனுரவுக்கு பயந்து கொண்டு பேசுவது எனக்குப் புரிகின்றது.

இது ஏன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அப்படி எந்தப் பயம் இல்லை. மனோ கணேசன் அனுர பற்றி உச்சரித்த வார்த்தைகளுக்காகத்தான் நிசாம் அப்படிப் பேசி இருக்க வேண்டும். நமது பார்வையில் இந்த நிசாமும் பேராசிரியர் ஜீல்.எல். போல ஒருவர்தான். அவர் திறமையான ஒரு சட்டத்தரணியாக இருக்கலாம். அரசியலில் அவருக்கு செல்வாக்க கம்மி.

நிசாமை மு.கா. செயலாளராக வைத்தே ஹக்கீம் காலத்தை ஓடிக் கொண்டு போகின்றார். இந்தப் பொதுத் தேர்தலிலும் அதில் முன்னேற்றங்கள் இருக்காது.

ஜனாதிபதி தேர்தலில் அனுர பற்றிய கருவறைக் கதையை பின்னர் தலைவர் ஹக்கீம் அடக்கி வாசித்ததும் அதில் பல்டியடித்ததும் அவருடன் பாசத்திலா என்று நாம் காரியிடம் கேட்க்கின்றோம்.

Previous Story

முஸ்லிம் தமிழ் வாக்குகள் NPP.க்கு இரட்டிப்பாகும்!

Next Story

நயவஞ்சகர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்போம்!