–நஜீப்–
ஜேவிபி. இந்த நாட்களில் தனது கட்சிக்கும் தலைவர்களுக்கும் எதிராக நடாத்தப்பட்டு வரும் விசமத்தனமான கருத்துக்களுக்கு சட்ட ரீதியாகப் பதில் வழங்குவதற்கு ஒரு குழுவை நியமித்து இயங்கி வருகின்றது.
அதன்படி ஹம்பாந்தோட்டையில் வைத்து சர்ச்சைக்குரிய ஜொண்ஸடன் பர்ணாந்து அணுர குமார தொடர்பாக வெளியிட்ட ஒரு கருத்துக்காக ஐநூறு (500) பில்லியன் அதாவது ஐம்பது கோடி (50) ரூபா நஸ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இப்போது அந்த வழக்;கு விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக தனது சட்டதரணிகள் சகிதம் அணுர குமார கடந்த புதன் கிழமை கொழும்பு உயர் நீதி மன்றத்துக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
அப்படி இந்த வழக்கில் அவர் வெற்றி பெறுவாராக இருந்தால் கிடைக்கின்ற அந்தப் பணம் கட்சிப் பணிகளுக்காக அல்லது சமூகப் பணிகளுக்காக பாவிக்கப்படலாம் என்று நாம் நம்புகின்றோம்.
தற்போது ராஜபக்ஸாக்கள் பிடி தளர்ந்து இருப்பதால் நீதியும் விளித்துக் கொண்டு கடமையை கண்ணியமாக செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நாட்டில் இருக்கின்றது.
நன்றி: 02.06.2024 ஞாயிறு தினக்குரல்