JVP:அணுர வெற்றிப் பயணம்!

நஜீப்

அணுரகுமார திசாநாயக்க ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் சந்திப்புக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்குப் பெருந் தொகையான இலங்கையர்கள் கலந்து கொள்வதுடன் அவரை சந்திப்பதற்காகவும் பார்ப்பதற்காகவும் மக்கள் அங்கு முண்டியடித்ததாகவும் ஐரோப்பாவில் இருந்த வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போன்று உள்நாட்டில் தேர்தல் தொகுதிகள் வாரியாக நடந்து வருகின்ற தேசிய மக்கள் சக்திக் கூட்டங்களும் மிகவும் வெற்றிகரமாக நடந்தேறி வருகின்றன. ஆனால் தேர்தல் என்று வரும் போது மக்கள் மீண்டும் காசுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் விலைபோய் விடுவார்கள் என்ற அச்சம் தேசிய மக்கள் சக்திக்கு இருந்து வருகின்றன.

மொட்டுக் கட்சியும் தேர்தல் என்று வந்தால் சஜித்தின் கூட்டணிக்கு அஞ்சுவதைவிட ஜேவிபியைப் பின்னணியாகக் கொண்ட இந்த அணிக்குப் பயப்படுவது தெரிகின்றது. எனவேதான் அவர்களது கூட்டங்களில் அந்த அணியை இலக்கு வைத்தே அதிக பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றது.

மஹிந்தானந்த அலுத்கமகே கடவுளில் பேரால் இந்த நாட்டு இளைஞர்களிடத்தில் கேட்டுக் கொள்கின்றேன் ஜேவிபியின் கதைகளை நம்பி என்பிபி.யில் இணைந்து விடாதீர்கள் என்று சில தினங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நன்றி: 25.12.2022 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

ஒரு MPக்கு 128 மதுபான நிலையங்கள்

Next Story

வானத்தில் நீச்சல் ஆழ்கடலில் ஓட்டம்!