Iran War: டிரம்ப்-ஐ பந்தாடும் சட்டம்..!

 அமெரிக்க நாடாளுமன்றத்தில்

பூகம்பம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை (மே 1) ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது காங்கிரஸுக்கு விளக்கம் அளித்து நீட்டிப்பு பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் நிற்கிறார். இல்லையெனில் அமெரிக்க படைகள் பொட்டியை கட்ட வேண்டியது தான்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் தலைமையிலான ரிபப்ளிகன் கட்சிக்கு பெரிய ஆதரவு இருக்கும் காரணத்தால், டிரம்ப்-ன் அனைத்து திட்டத்தையும், முடிவுகளையும் தடையின்றி செயல்படுத்தும் வாய்ப்பை பெறுகிறார். ஆனால் 53 ஆண்டு பழைய சட்டம் ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கையை கட்டிப்போட்டு உள்ளது.

Trump

1973 போர் அதிகார தீர்மானம்

அமெரிக்காவின் 1973 போர் அதிகார தீர்மானத்தின் படி, அமெரிக்க அதிபர் ராணுவ நடவடிக்கையை 60 நாட்கள் மட்டுமே தொடர முடியும். அதன் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது காங்கிரஸின் ஒப்புதலைப் பெற்று போரை நீட்டிக்க வேண்டும்.

இல்லையெனில் இறுதி வாய்ப்பாக அமெரிக்க படைகளின் பாதுகாப்புக்காக “தவிர்க்க முடியாத ராணுவத் தேவை” எனக் கூறி 30 நாட்கள் நீட்டிப்பு கோரலாம். இந்த விதியைப் பின்பற்றி டிரம்ப் நிர்வாகம் தற்போது ஈரான் போர் மீதான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

போர் எப்படித் தொடங்கியது? பிப்ரவரி 28 தாக்குதல்கள்

ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய விமானத் தாக்குதல்களுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து டிரம்ப் காங்கிரஸுக்கு 48 மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்தார்.

இதனால் 60 நாட்கள் காலக்கெடு கணக்கு மே 1 அன்று முடிவடைகிறது. ஏப்ரல் 8 முதல் அமலில் உள்ள போர்நிறுத்தம் காரணமாக போர் முடிந்துவிட்டதாக டிரம்ப் நிர்வாகம் வாதிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நிபுணர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் சொல்வது படி, இந்தக் காலக்கெடு எந்தப் பெரிய மாற்றமும், சிக்கலுமின்றி கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் தாக்குதல் ஏப்ரல் 8ஆம் தேதியே நிறுத்தப்பட்டதால், தற்போது கப்பல் போக்குவரத்து பாதைகளை இரு நாட்டு ராணுவமும் முடக்கியுள்ளது. இதனால் போரை முழுமையாகவும், உடனடியாகவும் முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

இதனால் டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 8ஆம் தேதியே போர் நிறுத்தப்பட்டு விட்டது என கூறலாம், அல்லது 30 நாட்கள் நீட்டிப்பு பெற்று தாக்குதலை மீண்டும் துவங்கலாம். இதே நேரத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஈரான் தரப்பில் வெள்ளிக்கிழமை டிரம்ப் நிர்வாகம் முக்கியமான அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை அமெரிக்க தரப்புக்கு அனுப்ப பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் vs ரிபப்ளிகன்

ஈரான் போர் தொடர்பான விவகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் அரசியல் அமைப்புச் சட்டப்படி போர் அறிவிக்கும் உரிமை காங்கிரஸுக்கே உண்டு எனக் கூறி, டிரம்ப் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினர் பல முறை தீர்மானங்கள் கொண்டு வந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வேண்டும் அல்லது காங்கிரஸ் ஒப்புதல் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் ரிபப்ளிகன் கட்சியினர், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானங்களை ஒருமித்தமாக நிராகரித்து வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை செனட்டில் நடைபெற்ற ஆறாவது முயற்சியிலும் ரிபப்ளிகன் கட்சியினர் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தினர்.

Previous Story

"එදාටත් වඩා අද ශක්තිමත්"

Next Story

அரசு புலிவாலைப் பிடித்த நிலை.!