HOT NEWS

என்னையும் கொன்று விடுவார்கள்”

நஜீப்-

நமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சக ஊடகக்காரர் சமுதித்த, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் நாடறிந்த வைத்திய நிபுணர் ரணில் ஜயாசேன. என்னைக் கொல்வதற்கு முன்னர் உங்களிடம் நான் சில செய்திகளைச் சொல்ல வேண்டும்.

அதுவும் நான் தரும் தகவல்களை எந்தத் தனிக்கையும் செய்யாது அப்படியே மக்களுக்குச் சென்றடையவும் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் டாக்டர் விதித்த நிபந்தனை. நான் சொல்கின்ற தகவல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதனையும் தான் தெரிந்து வைத்திருப்பதாகவும் டாக்டர் தனது பேட்டிக்கு முன்னரும் பேட்டியிலும் சொல்லி இருக்கின்றார்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் அல்லது பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் மக்களுக்குப் புரியாமல் இருக்கின்றது. குறிப்பிட்ட ஒரு முகவரியையும் அச்சகத்தையும் சொல்லி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின்  செயலாளர் காமினி செனரத் சட்டரீதியான 5000 ரூபா காசுகளை பில்லியன் கணக்கில் கள்ளத்தனமாக அச்சுப் பண்ணி விநியோகம் செய்கின்றார்.

அதனை அறிந்த ஒருவர் இரகசியம் வெளியாகக் கூடாது என்பதற்காகக் கொல்லவும் பட்டிருக்கின்றார் என்ற சர்ச்சைக்குரிய கதைதான். ‘என்னையும் கொன்று விடுவார்கள்’ என்பது. இந்த செய்தி நாட்டில் வைரலாக இருக்கின்றது. இதனை நாம் முதலில் நமது வாசர்களுக்கு எத்தி வைக்கின்றோம்.

 

Previous Story

ஜனாதிபதி  விலகினால்: அரசியலமைப்பு கூறுவது !

Next Story

எனது தந்தையின் கொலைகாரனிற்கு வாக்களித்த அனைவரையும் மன்னித்து உங்களுடன் இணைந்துநிற்கின்றேன்!