AUG:5 வரை இஸ்மத் மௌலவிக்கு விளக்கமறியல் 

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் இஸ்மத் மௌலவி  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட  இஸ்மத் மௌலவி ஆகஸ்ட் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அடையாள அணிவகுப்புக்கும் அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்பில் ஆஜராகும் மூத்த சட்டத்தரணி சிராஸட நூர்தீன் தெரிவித்தார்.

Previous Story

நாடே காணாமல் போகும்-ஜனாதிபதி ரணில்

Next Story

இலங்கை: பொருளாதாரம்  அடுத்த 6 மாதங்கள்?