வாரிசுக்காக களத்தில் மஹிந்த!

 நஜீப்

மக்கள் எழுர்ச்சியின் போது தலைமறைவாக இருந்த ராஜபக்ஸாக்கள் தற்போது மெல்ல மெல்ல பொது நிகழ்ச்சிகளில் கலந்த கொள்ளத் துவங்கி இருக்கின்றார்கள். நமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் பௌத்த விகாரைகள் வழியே ஒரு விசிட்டை மேற்கொண்டு அங்குள்ள பௌத்த தலைவர்களை சந்தித்து  வருகின்றார்.

இந்தக் காட்சிகளைத் தற்போது தெற்கில் பார்க்க முடிகின்றது. அதே போன்று அவர் பொது நிகழ்ச்சிகளிலும் தற்போது தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அண்மையில் இவர் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதை மறந்து பேசியதும். ஏழுந்து நிற்பதற்கும் நடப்பதற்கும் அவருக்கு துனை தேவைப்படுக்கின்றது.

அப்பச்சியாகஜனரஞ்சமாகி இருந்தவர் இப்போதுசீயாவாகிமீண்டும் மக்கள் கூடுகின்ற இடங்களில் புகுந்து குழந்தைகளை தூக்கி கொஞ்சி வருகின்றார். வயது காரணமாக சுயஉணர்வு இழந்திருக்கின்ற இந்த மனிதனிடம் குழந்தைகளைக் கொடுப்போது பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜேவிபி முக்;கியஸ்தர் ஒருவர் சுட்டிக் காட்டி இருந்தார். தற்போதய சுற்றில் அவர் தனது வாரிசு நாமலுக்காகத்தான் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

நன்றி:16.10.2022 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

பிபிசிக்கு இன்று 100வது பிறந்தநாள்:

Next Story

UK: ரிஷி சுனக்கை பிரதமராக்க முயற்சி- லிஸ் டிரசுக்கு நெருக்கடி