ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
அப்போது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தார். உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு கொளுத்தினர். தங்களது கூந்தலையும் வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அபீர் அல் ஷலானி என்ற சுவீடன் பெண் எம்.பி. ஈரானில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பேசினார்.