-நஜீப்-
நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்து மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி நாடு விட்டு நாடு தாவித் திரிந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாட்டுக்கு வந்து சில நாட்கள் அமைதியாக இருந்தார்.
இப்போது அவருக்கு அதிகாரம் மிக்க அமைச்சுப் பதிவியொன்றை வழங்கி அவரை அரசியலில் ஈடுபடுத்த மூத்த சகோதரர் மஹிந்த மிகுந்த ஆர்வத்தில் இருப்பதாகத் தெரிகின்றது.
பாதுகாப்புச் செயலாளராக இருந்த நாட்களில் கொழும்பு நகரை அவர் சுத்தப்படுத்தியதை வைத்துத்தான் நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்தவரை இப்போது டவுனுக்கு அமைச்சராக்கி அழகு பார்க்க சகோதரர் மஹிந்த நாடுகின்றார் போலும்.
இதில் ரணில் ஓகே சொல்வதைத் தவிர வேறு வழிகிடையாது. மேலிடத்து சிபார்சை அவர் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதுதான் தற்போதய இலங்கை அரசியல். டவுனுக்கு வருகின்ற கோட்டா முன்பு போல காரியம் ஆற்றுவார் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
தனக்கு எவ்வளவு பணம் வேண்டுமே அதனை அப்போதய ஜனாதிபதி மஹிந்த கேட்ட போதெல்லாம் கோட்டாவுக்கு கொடுத்து வந்தார்.
ஆனால் இன்று கஜானா சீரோவாக இருக்கின்ற நேரத்தில் கோட்டா எந்தப் பதவியை ஏற்றாலும் சித்தியடையமாட்டார் என்பதனை நாம் முன்பே சொல்லி வைக்கின்றோம்.