பாகிஸ்தான் பிரதமர், தன் உறவினருக்கு விதிமுறையை மீறி உதவும்படி அதிகாரிக்கு உத்தரவிடும் ‘ஆடியோ’ வெளியாகி அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ– இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோ பதிவிட்டுள்ளார்.
அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அரசின் உயர் அதிகாரியிடம் பேசுகிறார். இந்தியாவில் இருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு, தன் மருமகனான ரஹீல் என்பவருக்கு சில விதிமுறைகளை தளர்த்தி உதவும்படி கூறுகிறார்.

சமூக வலைதளத்தில் இந்த ஆடியோவை ஏராளமானோர் பகிர்ந்து, பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.